Saturday, 12 November 2016

கவிதைகளின் உறைவிடம்

கவிதைகள்
முளைத்துக்கொண்டிருக்கின்றன
உன் மீதும்
உன்மீதும்

இப்போதுமட்டுமல்ல
எப்போதும்
முப்போதும்

முளைத்துச் செடியாகி
நல்விருட்சமாகி
பெருங்காடென ஆவோமா

வண்ண வண்ணப் பறவைகள்
தங்கி இளைப்பாறும்
நல்லுறைவிடமாக!